Bigg Boss 5 elimination : இந்த வாரம் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறியது தாமரை என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுமே இல்லாமல் வெளியேறியதற்கு பதில் முன்பே பிக் பாஸ் கொடுத்த ஆஃபரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மீதமுள்ள ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும். மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பரிசும் கிடைக்காது. ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

இதுவரை நடந்த 4 சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேறி உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் இன்று அந்த பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெட்டி மட்டுமே அனுப்பப்படும், ஆனால் இந்த முறை பெட்டியுடன் நடிகர் சரத்குமாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். அவர் எடுத்து வந்த பெட்டியில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது.

பின்னர் ரூ.லட்சமாக இருந்த பரிசு தொகை 12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டது. இந்த பணத்தை ஏழ்மையின் பிடியில் சிக்கி இருந்த தாமரை தான் எடுத்துக்கொண்டு வெளியில் செல்வார் என எதிர்பாக்கப்பட்டது. இது குறித்து போட்டியாளர்களும் தாமரையிடம் பேசி பார்த்தனர். ஆனால் தாமரை அந்த பணத்தை எடுக்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து சிபி பணத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இந்த வாரம் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறியது தாமரை என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுமே இல்லாமல் வெளியேறியதற்கு பதில் முன்பே பிக் பாஸ் கொடுத்த ஆஃபரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.