பிக்பாஸ் பிராப்ளம் ! விஜய் டிவி, கமல்ஹாசனை வம்புக்கிழுத்த மதுமிதா ! போலீசில் புகார் !!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைபடுத்தியதாக நடிகை மதுமிதா போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதைப் பாத்தும் நடிகர் கமல்ஹாசனும் கண்டு கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
பிக்பாஸ் மூன்றாவது எபிசோட் தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையான மதுமிதா பங்கேற்றார். மக்களிடையே நல்ல ஆதரவு இருந்த நிலையில் மதுமிதா ஃபைனல்ஸ்க்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை மற்றும் சக போட்டியாளர்கள் கொடுத்த மன உளைச்சலால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா தபால் மூலம்புகார் அளித்துள்ளார்.
மேலும் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா தபால் மூலம் அளித்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தனது புகாரில் கூறியுள்ளார்.