Asianet News TamilAsianet News Tamil

தாமரை - நமீதாவுக்கு நடுவே வெடித்த பிரச்சனை..!! சமாதானம் செய்ய வந்த அண்ணாச்சிக்கு செம்ம பல்பு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் (Biggboss)  தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், தாமரைக்கும் (Thamarai selvi)  - நமீதா மாரிமுத்துவுக்கும் (namitha marimuthu) இடையே வெடிக்கும் பிரச்சனை குறித்து காட்டப்பட்டுள்ளது.

 

Big Boss house thamarai selvi exploding problem between Namitha
Author
Chennai, First Published Oct 8, 2021, 2:03 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், தாமரைக்கும் - நமீதா மாரிமுத்துவுக்கும் இடையே வெடிக்கும் பிரச்சனை குறித்து காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் எப்போது பிரச்சனை வெடிக்கும் என்பதற்காகவே ஒரு தரப்பு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, தற்போது அவர்களது ஆசையை நிறைவேற்றும் விதமாக, அமோகமாக துவங்கியுள்ளது முதல் பிரச்சனை. பிக்பாஸ் வீட்டில் இந்த போட்டியை பற்றி தெரியாமல் அப்பாவி தனமாக விளையாடி வரும் தாமரை செல்விக்கும், நமீதாவுக்கு இடையே தான் இந்த பிரச்சனை வந்துள்ளது.

மேலும் செய்திகள்: டால் அடிக்கும் சிவப்பு நிற உடையில்... இடையழகை காட்டி சொக்க வைக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி!!

 

Big Boss house thamarai selvi exploding problem between Namitha

பாத்ரூமில், தாமரை செல்வி நமீதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, நமீதா 40 குழந்தைகளையாவது தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என தன்னுடைய வாழ்நாள் ஆசையை கூறியுள்ளார். இதற்க்கு எப்படி பதில் கூற வேண்டும் என தெரியாமல் ஏலனமாக சிரித்தபடி, 40 என்ன... 400 குழந்தைகளை கூட நீ வளர்த்துக்கொள்ள என்று தாமரை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தது ஏன்... வெளியான தகவலை!

 

Big Boss house thamarai selvi exploding problem between Namitha

இவர் சிரித்து கொண்டு கூறிய விதம், நமிதாவின் ஈகோவை தூண்டி அவர் இதனை பிரச்சனையாகி வருகிறார். இதுகுறித்து தாமரை செல்வி அண்ணாச்சியிடம் கூற, அவர் இருவருக்கும் இடையே சமாதானம் பேச முயன்று, நமீதா இங்கவா மா... என்று கூப்பிட, என்னை அங்கு கூப்பிடாதீங்க என கை எடுத்து கும்பிட்டு அண்ணாச்சிக்கு செம்ம பல்பு கொடுத்துவிட்டார் நமீதா. இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios