தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வந்த பாவனா ஒரு சில நாட்களுக்கு முன் காரில் கடத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக பட்ட சம்பவம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சுனில் மலையாள சினிமா உலகில் அனைத்து பிரபலங்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் என கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மலையாள பிரபலங்களுக்கு தேவையான டிரைவர் அனுப்புவது, கார் அனுப்புவது என பலருடன் நல்ல விதமான தொடர்பில் உள்ளார்.

சில சமயங்களில் இவனே கார் ஒட்டவும் செல்வானாம். எல்லோரிடமும் சகஜமாக பழகும் அவன் பாவனாவிடமும் நன்கு பழகியுள்ளான். பாவனா அவனுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் தன் வீட்டின் எல்லா இடங்களுக்கும் சென்றுவர அனுமதி கொடுத்திருந்தார்.

பல முறை அவரது பெட்ரூமிற்கும் பாவனாவின் பொருட்களை வைத்துவிட்டு வர செல்வாராம் ஆனால் இது அவரது அம்மாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.

ஒருநாள் அவன் யாருக்கும் தெரியாதபடி பாவனாவின் படுக்கை அறைக்குள் சென்று கேமராவை மாட்டியிருக்கிறாரார். இதை பார்த்த பாவனாவின் அம்மா அவனை கண்டித்து ட்ரைவர் வேலையில் இருந்து அன்றே விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சில பல வேலைகளில் சிக்கியுள்ள இவன் குறித்து சில தகவல்களும் கிடைக்க வேலையில் இருந்து நிரந்தரமாய் நீக்கியுள்ளார் பாவனா.

இதனால் அவன் தனக்கு தெரிந்த ஒருவரை அவருக்கு டிரைவராக அனுப்பி அவன் மூலம் பாவனாவை பிளான் செய்து இப்படி பழிவாங்கியதாக கூறப்படுகிறது.