பெண்களை ஏமாற்றியதற்காக ஆர்யா மீது வழக்கு போடலாம்...! தொகுப்பாளர் சங்கீதா பரபரப்பு பேட்டி..!
தமிழ் திரையுலகில், கடந்த சில மாதங்களாக மிகவும் பரபராப்பாக பார்க்கப்பட்டதும், விமர்சிக்கப்பட்டதும் நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை இந்த நிகழ்ச்சி சந்தித்தாலும், பின் இளம்வட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சியாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆர்யா ஏதேனும் ஒரு பெண்ணை கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில். தான் எந்த பெண்ணையும் திருமணம் செய்யும் மன நிலையில் இல்லை எனக் கூறி யாரையும் திருமணம் செய்யவில்லை என அறிவித்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா தற்போது அளித்துள்ள பேட்டியில் "ஆர்யா ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்ரீமென்ட் போட்டுள்ளார். இறுதியில் ஆர்யா அப்படி ஒரு முடிவை அறிவித்த பிறகு, அந்த தொலைக்காட்சி நினைத்திருந்தால் ஆர்யா மீது வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. ஆர்யாவின் வாழ்க்கையை கெடுக்க அவர்கள் விரும்பவில்லை" என கூறியுள்ளார்.