பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேறிய கவலையில் இருந்து மீண்டு, தற்போது மீண்டும் டாஸ்குகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் அர்ச்சனா. அன்பு குரூப்பில் இருந்து ஒரேயடியாக இரண்டு பேர் சென்றதால் கடந்த இரண்டு நாட்களாகவே கொஞ்சம் அப்செட்டில் தான் இருந்தனர் அன்பு அணியை சேர்ந்தவர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேறிய கவலையில் இருந்து மீண்டு, தற்போது மீண்டும் டாஸ்குகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் அர்ச்சனா. அன்பு குரூப்பில் இருந்து ஒரேயடியாக இரண்டு பேர் சென்றதால் கடந்த இரண்டு நாட்களாகவே கொஞ்சம் அப்செட்டில் தான் இருந்தனர் அன்பு அணியை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இன்று சண்டைக்கு பஞ்சம் இல்லாத டாக்கை தான் பிக்பாஸ் கொடுத்தார். முதல் புரோமோவில் அடித்து பிடித்து விளையாடினார்கள் போட்டியாளர்கள். இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரோமோவில், ஆரி - அர்ச்சனா இடையே கடும் வாக்குவாதம் வந்தது. பின்னர் அர்ச்சனாவிடம் ஆரி சவால் விட்டு விளையாட்டை மேற்கொள்வதையும் பார்த்தோம்.
இதைத்தொடர்ந்து சற்று முன்னர் வெளியாகியுள்ள புரோமோவில், அர்ச்சனா தன்னுடைய அணியில் உள்ள ரியோவையே தூக்கி எரிந்து பேசுவது வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் நரிகள் குரூப்பாக சென்று தாக்க வேண்டும் என்று சொன்னது நீங்கள் தான், ஆனால் அதை நீங்களே கடைபிடிக்கவில்லையே என அர்ச்சனாவிடம் ரியோ கேட்க, உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் கூறுகிறார்.
பின்னர் பாலாஜியின் பக்கத்தில் உள்ள நியாயத்தை ஆதரித்து பேசுவதும் ரியோ, நீ மட்டும் தான் அதை ஃபாலோ பண்ணுன அதை தான் ஏன் என்று கேட்பதாக சோகமாக கூறுகிறார். பின்னர், ரியோவை கிண்டல் செய்வது போலவே... டேமேஜான பீசு நானு என்கிற பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்த புரோமோ இதோ...
#Day72 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/XTjRcneyOF
— Vijay Television (@vijaytelevision) December 15, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 15, 2020, 4:20 PM IST