Asianet News TamilAsianet News Tamil

25 வருடங்களுக்குப் பின் அரவிந்த்சாமி எடுத்த அதிரடி முடிவு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

25 ஆண்டுகளுக்குப் பின், நடிகர் அரவிந்த்சாமி நேரடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் இவரது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

aravind samy after 25 years back acting Malayalam movie
Author
Chennai, First Published Feb 16, 2021, 1:10 PM IST

25 ஆண்டுகளுக்குப் பின், நடிகர் அரவிந்த்சாமி நேரடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் இவரது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'தனி ஒருவன்' படத்திற்கு பின் செம்ம பிஸியான நடிகராக மாறிய அரவிந்த்சாமி தற்போது அரை டஜன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள, கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2,  வணங்காமுடி, நரகாசுரன், தலைவி, ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

aravind samy after 25 years back acting Malayalam movie

இந்நிலையில் தற்போது சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த் சாமி. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் குஞ்சகோ போபன்னுடன் நடிகர்  அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் டி.பி.ஃபெலினி இயக்கவுள்ளார்.  ஆகஸ்ட்  சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

aravind samy after 25 years back acting Malayalam movie

மும்பை, கோவா, என முழு படத்தையும் இந்தியாவிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios