பிக்பாஸ் வீட்டில் அன்பை காட்டி அனைவரையும் அரவணைக்கிறேன் என கூறிய அர்ச்சனா சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த அன்பு குரூப்பின் தூண்களான நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அர்ச்சனாவுக்கு முன்னரே ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர் என்பது நாம் அறிந்தது தான்.
பிக்பாஸ் வீட்டில் அன்பை காட்டி அனைவரையும் அரவணைக்கிறேன் என கூறிய அர்ச்சனா சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த அன்பு குரூப்பின் தூண்களான நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அர்ச்சனாவுக்கு முன்னரே ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர் என்பது நாம் அறிந்தது தான்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அன்பு குரூப்பை சேர்ந்த, அர்ச்சனா, நிஷா, ரேகா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது தான் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
அன்பு குரூப்பில் தற்போது சுக்குநூறாக உடைந்த நிலையில், வெளியில் சென்ற போட்டியாளர்களும் தற்போது யார் சிறப்பாக விளையாடி வருகிறார், யார் மீது தவறு என்பதை உணர்ந்து, இறுதி சுற்றுக்கு சென்றுள்ள சக போட்டியாளர்கள் அனைவரையும் உற்சாக படுத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
வாசல் வழியாக வராமல், போட்டியாளர்கள் அனைவரும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, மூவரும் வருகிறார்கள். இவரைகளை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி வீட்டிற்குள் சென்று, மிகவும் மிஸ் செய்ததாக ஒவ்வொருவரும் கட்டி தழுவி தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவது தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.
அந்த புரோமோ இதோ...
#Day99 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/GYsdEuO1OS
— Vijay Television (@vijaytelevision) January 11, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 11:11 AM IST