பிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய அமலா பால்..!
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, நடிகைகளுக்கு திருமணம் நடந்து விட்டால் அவர்களை கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க வைப்பது அரிது எனக் கூறலாம். இப்படி பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்குப் பின் அண்ணி, அக்கா போன்ற கதாபாட்திங்களில் நடித்துள்ளனர்.
இந்த விஷயத்தைப் பொறுத்த வரை அமலாபாலுக்கு அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். இவருக்கு திருமணம் ஆகி, விவாகரத்து ஆன பின்பும் கூட இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக நடித்து கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில மாதத்திற்கு முன் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படமும், அதைத் தொடர்து கடந்த வாரம் வெளியான திருட்டு பயலே 2' திரைப்படமும் அமலாபாலுக்கு வெற்றிப் படமாக அமைந்ததால் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
இந்நிலையில் அமலாபால் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியாக கமிட் ஆகி இருந்தார். கேரளாவில் 1980 களில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தை பிரதிபலிக்கும்படியாக இப்படத்தின் கதை அமைந்திருந்தது...
தற்போது இந்தப் படத்தில் இருந்து திடீர் என விலகியுள்ளார் அமலபால். மேலும் இவருக்கு பதில், இந்தப் படத்தில் பிரியா ஆனந்த் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் திடீர் என இந்தப் படத்தில் இருந்து அமலாபால் விலக என்ன காரணம் என இது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.