Asianet News TamilAsianet News Tamil

அஜித்தால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்...! 

ajith cheeted for fans always
ajith cheeted for fans always
Author
First Published May 2, 2018, 11:47 AM IST


தல அஜித் நேற்று தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்போதும் பிரமாண்டமான கொண்டாட்டங்களை, விரும்பாத இவர், தன்னுடைய குடும்பத்துடன் எங்காவது வெளியூருக்கோ... அல்லது வெளிநாட்டுக்கோ சென்று விடுவது வழக்கம்.

ஆனால் அஜித் ரசிகர்களோ... அதனை பெரிது படுத்துவதே இல்லை. எப்போதும் போல் அஜித்தை பார்க்க முடியாது என்பது தெரிந்தும் அவருடைய வீட்டின் முன்பு குவிந்து, ஆட்டம், பாட்டம், பட்டாசு என அசத்தி விடுவார்கள். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அஜித் வீட்டின் முன்பு குவியும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மிஞ்சுவது என்னமோ ஏமாற்றம் தான்.ajith cheeted for fans always

இந்த வருடமும் திருவான்மியூரில் அஜித் ரசிகர்கள் நள்ளிரவே கூடி, தல அஜித் வாழ்க என கோஷம் போட்டு, வீட்டின் முன்னாள் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டானர். 

500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு திரண்டதால், போலீசார் குவிக்கப்பட்டு ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் முனைப்புக்காட்னர், அஜித்தை தான் பார்க்க முடிய வில்லை ஆனால் அவருடைய வீட்டையாவது பார்க்கலாம் என வெளியூர்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் சோகமாக அங்கிருந்து புறப்பட்டனர். ajith cheeted for fans always

ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் இப்படி அவருடைய பிறந்தநாளை கொண்டாட, மற்றொரு புறமோ... தலக்கு, ட்விட்டர், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தது. மேலும் அஜித் நல்ல ஆரோக்கியதுன்டனும் உடல் நலமுடனும் வாழ ராகவேந்திரா சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

ரசிகர்கள் மட்டும் இன்றி, அஜித்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios