Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரணத்திற்கு 'தல' அஜித் 2 .5 கோடி நிதி உதவி..! குவியும் பாராட்டு..!

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில்  பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கிய நிலையில், அவர்களை தொடர்ந்து தல அஜித் 2 . 5 கோடி நிதி வழங்கியுள்ளார்.
 

Ajith 2.5 crore financial help for corona relief
Author
Chennai, First Published May 14, 2021, 10:43 AM IST

கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில்  பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் பிள்ளைகளும், நடிகர்களுமான சூர்யா - கார்த்தி இருவரும், சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிதி வழங்கிய நிலையில், அவர்களை தொடர்ந்து தல அஜித் 2 . 5 கோடி நிதி வழங்கியுள்ளார்.

Ajith 2.5 crore financial help for corona relief

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள திமுக கட்சி, தற்போது நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் போதிய அளவில் தடுப்பூசி இல்லை என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.

Ajith 2.5 crore financial help for corona relief

அதே நேரத்தில் கொரோனாவால் தமிழகம் மற்றும் புதுவையில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.   முதல் அலையை விட, இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

Ajith 2.5 crore financial help for corona relief

இவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில்... கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகர் சிவகுமாரின் வாரிசுகள், கொரோனா பணிக்காக முதல் ஆளாக வந்து உதவினார்கள்.  முதலமைச்சரை நேரில் சந்தித்து, ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

Ajith 2.5 crore financial help for corona relief

இவர்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜித், ரூ.2 . 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம், நேரடியாக முதல்வர் நிவாரண நிதிக்கு அஜித் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் போதிய மருத்துவ உபகாரணங்களுக்காக, அடுத்தடுத்து பல பிரபலங்கள் உதவி செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios