வாடகை தாயாகும் ஐஸ்வர்யா ராய்..? காரணம் என்ன..?
வாடகை தாயாகும் ஐஸ்வர்யா ராய்..? காரணம் என்ன..?
உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் முதலில் மனதில் வந்து நிற்பார்.
அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இவர்...பாலிவுட்டில் எப்போதுமே புகழின் உச்சியில் இருக்கும் இவர், தற்போது வாடகை தாயாக மாற உள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, ஒரு பெண் குழந்தை உள்ளார்.இதனை அடுத்து தற்போது மிகவும் பிசியாக உள்ள ஐஸ்வர்யா ராய்,அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்து உள்ளார்.
அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்,வாடகை தாயாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால்,ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிப்பதை ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள வில்லை...
மாறாக பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இருந்தபோதிலும்,அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.