பிரபல நடிகர் பற்றி ஒரே வார்த்தையில் கூறிய ராஷ்மிகா மந்தனா..! ரசிகர்களின் கேள்விக்கு ஸ்வீட் பதில்!
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா' திரைப்படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்த ரசிகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் படம் பற்றியும் அந்த படத்தின் நாயகன் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா' திரைப்படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்த ரசிகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் படம் பற்றியும் அந்த படத்தின் நாயகன் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “புஷ்பா மிகவும் நன்றாக உருவாகி வருகிறது. மும்முரமாகவும், அதே சமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்,” மேலும், “இந்த படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்,” என கூறியுள்ளார்.
“சுகுமார் சார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?” என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் குறித்து ஒரே வார்த்தையில் கூறுமாறு கோரிய ரசிகருக்கு, “அவர் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்,” என்று ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
ஆகஸ்ட் 13 அன்று வெளியாகவுள்ள புஷ்பா, அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய படமாகும். சுகுமார் இயக்கியுள்ள இந்த இந்த படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், ரஷ்மிகா நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த, 'சுல்தான்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சில படங்களில் ராஷமிக்காவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.