விவாகரத்து கேட்டு நீதி மன்றம் நாடிய பிரபல நடிகை நந்திதா தாஸ்....!!!
தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா தாஸ்.
வெள்ளையானவர்கள் மட்டுமே சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க முடியும் என்று நினைத்திருந்த நினைப்பை, முற்றிலு, மாற்றி திறமை இருந்தால் போது என நிரூபித்து ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் நந்திதா தாஸ்.
இவர் தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை ஆகிய படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
மேலும் இவர் 2002ம் ஆண்டு சவுமியா சென் என்பவரை திருமணம் செய்து பின் சில கருது வேறுபாடுகள் காரணமாக 2007ல் விவாகரத்து செய்தார்.
அதன்பிறகு, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் விகான் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நந்திதா தாஸ்க்கும், அவருடைய கணவர் சுபோத் மஸ்காராவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் . இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.