Asianet News TamilAsianet News Tamil

’தமிழ்ப்பெண் நான் ஓய்ந்துபோகமாட்டேன்’...தொழில் போட்டியாளர்களுக்கு சவால் விடும் நடிகை மீரா மிதுன்...

’மிஸ் சவுத் இந்தியா’பட்டம்  பதவி பறிக்கப்பட்ட நிலையில், தான் ஏற்கனவே திட்டமிட்டிருந்த 3ம் தேதி தமிழ் அழகிப் போட்டி நிகழ்ச்சியையும் நடிகை மீரான் நடத்தவிடாமல் போலீஸ் துணையுடன் அவரது தொழில் போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த அழகிப்போட்டி கோஷ்டிகளின் சண்டைதான் தற்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது.

actress mira mithun's interview
Author
Chennai, First Published Jun 4, 2019, 12:47 PM IST

’மிஸ் சவுத் இந்தியா’பட்டம்  பதவி பறிக்கப்பட்ட நிலையில், தான் ஏற்கனவே திட்டமிட்டிருந்த 3ம் தேதி தமிழ் அழகிப் போட்டி நிகழ்ச்சியையும் நடிகை மீரான் நடத்தவிடாமல் போலீஸ் துணையுடன் அவரது தொழில் போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த அழகிப்போட்டி கோஷ்டிகளின் சண்டைதான் தற்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது.actress mira mithun's interviewஇந்நிலையில் தனக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் நடிகை மீரா மிதுன். அப்போது பரிதாபமாகப் பேசிய அவர்,“ஒரு அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில் ஒருங்கிணைப்பாளர்  நேற்று  போனைவில்லை. இந்த நிலையில் அவரை சந்திக்க நேரில சென்றேன் .இன்று நிகழ்ச்சியை நடத்தகூடாது என்று இரண்டு போலிஸ் அதிகாரிகளை கூட்டி வந்து என்னை பயமுறுத்தினார். actress mira mithun's interviewநான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன். என்னை முன்பு மிரட்டிய அஜித் ரவி, ஜோ மைக்கேல்  ஆகியோருடன் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்  இணைந்து கொண்டு இன்று நிகழ்ச்சியை நடத்த விடாமல க்ரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிரட்டப்பட்டேன். நான் என்ன தவறு செய்தேன் என்று   தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுகொண்டிருக்கிறேன். தமிழ்ப்பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன்.actress mira mithun's interview

அதை இன்று நடத்த விடாமல் முறியடித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். இன்றே இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று சின்ன சின்ன ஹோட்டலில் போய் நடத்த முற்பட்டேன். ஆனால் இந்த இறுதிப் போட்டியாளர்களின்  கனவு, இந்த விழா மிகப்பெரியதாக இருக்கும் என்பது தான். அதை உடைக்க நினைக்கவில்லை. இந்த விழாவை கண்டிப்பாக மிகப்பெரிய விழாவாக நடத்துவேன். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்பட்டி அனைத்தும் எனக்கு சாதகமாக இருந்தும் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்ப்பெண்ணாக நான் ஓய்ந்து போக மாட்டேன். கண்டிப்பாக ஜெயித்து காட்டுவேன் “என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios