Amala Paul : பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்டு.. ரசிகர்கள் மனதை குளிர வைத்த அமலா பால் - வைரலாகும் வீடியோ
நடிகை அமலாபால் பிகினி உடையணிந்து கடற்கரையில் குளித்தபோது எடுத்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் செம்ம வைரலகி வருவதோடு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
மலையாள நடிகையான அமலாபால், தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் பேமஸ் ஆனார். இவர் முதன்முதலில் நடித்த படம் சிந்து சமவெளி, இதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் இவர் நடித்த மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததால், அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார்.
இதையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின் சினிமாவில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கிய அவர், ஆடை என்கிற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படத்தை மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கி இருந்தார்.
இதையும் படியுங்கள்... இதுக்கு போய் ஆஸ்காரா... 80 கோடி செலவு பண்ணிதான் வாங்கிருக்காங்க! விமர்சனங்களுக்கு விளக்கம் தந்த ஜேம்ஸ் வசந்தன்
இதன்பின்னர் தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழிகளிலும் நடிக்கத் தொடங்கிய அமலாபால் தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் தற்போது போலா என்கிற திரைப்படம் பாலிவுட்டில் தயாராகி உள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் அமலாபால் நடித்துள்ளார், கைதி படத்தின் ரீமேக்கான இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், போலா படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில், அப்படத்தின் நாயகியான அமலாபால் பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம்போட்டம்படி எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பாலிவுட்டுக்கு போனதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இப்படி படு கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை அமலா பால் வீடியோ வெளியிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு செம்ம மாஸான வில்லனாக அஜித்தை நடிக்க வைக்க பிளான் போடும் பிரபலம்... ஓகே சொல்வாரா ஏகே?