Asianet News TamilAsianet News Tamil

பணம் திருடியதாக பழி போடப்பட்ட நடிகை..! அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் திருட்டு பழி சுமற்றப்பட்டது குறித்து கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
 

Actress accused of stealing money Shocking information told by him
Author
Chennai, First Published Jun 23, 2021, 7:42 PM IST

பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் திருட்டு பழி சுமற்றப்பட்டது குறித்து கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா, 2005 ஆம் ஆண்டு, 'யஹான்' என்கிற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவருடைய நடிப்பு திறமைக்கு அடுத்தது கார்ப்பரேட், ராக்கி, கிடனாய், அனாமிகா, ஜோக்கர் ஆகிய பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர்.

Actress accused of stealing money Shocking information told by him

பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரயன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, ஒரு சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிருந்தார்.  இந்நிலையில் இவர் மீது திருட்டு புகார் ஒன்றை சுமாற்றியதாக பேட்டி ஒன்றில்  மினிஷா லம்பா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியுள்ளதாவது.. "நான் நடிகையாகும் ஆசையோடு மும்பை வந்த புதிதில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். விடுதி ஒன்றில் மாத வாடகை ரூ.5  ஆயிரம் கொடுத்து தங்கி இருந்தேன். அந்த விடுதியின் உரிமையாளர் ஒரு நாள் நான் அவரது அலமாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக பழி கூறினார். 

Actress accused of stealing money Shocking information told by him

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் பணத்தை திருடவில்லை. ஆனால் எதனால் அப்படி பழி போட்டார் என்பது தெரியாது... இதனால் 2 நாட்களில் அந்த விடுதியை விட்டு வெளியேறி மாத வாடகை ரூ. 7 ஆயிரத்திற்கு ஒரு வீட்டை பார்த்து வாடகைக்கு சென்றேன். இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகியும், தன்னுடைய மனதை விட்டு நீங்காமல் ரணமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios