A.வெங்கடேஷ் (A.Venkatesh Director) இயக்கத்தில் உருவாகி வரும் " ரஜினி " (Rajini Movie) படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும்  A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் (Vimal) நடிக்கும் புதிய படத்தையும்  பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார் V.பழனிவேல் (V.Pazhanivel).

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் ஜீவன், மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் "பாம்பாட்டம் " மற்றும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் " ரஜினி " படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. விழாவில் நாயகன் விமல், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தம்பி ராமைய்யா, படத்தின் இசையமப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் மகேந்திர குமார், களாபி, பரமசிவம், முருகானந்தம், கலைமகன் முபாரக், திருமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது...
நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இது வரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் இது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதிலிருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்க இருக்கிறேன்.

விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய 'ரஜினி' படப்பிடிப்பிற்கு ஒருநாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார் அப்போது நான் இந்த படத்தின் ஒன் லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார். உடனே கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார்.நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.