Asianet News TamilAsianet News Tamil

நாலு பேருக்கு பயன்படுவேன்... நடிகர் சூர்யா மீண்டும் மெசேஜ்!

இந்த விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்றதால், புதிய கல்வி கொள்கை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சூர்யாவின் பேச்சுக்கு ரஜினி ஆதரவு அளித்து பேசினார்.
 

Actor surya on Kappan film function
Author
Chennai, First Published Jul 22, 2019, 7:07 AM IST

என்னுடைய நிஜ வாழ்க்கையில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Actor surya on Kappan film function
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியது, அதற்கு பாஜக, அதிமுகவிலிருந்து வந்த எதிர்வினையும் பேசு பொருளானது. இந்த விவகாரம் தொடபாக சூர்யா 2 பக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு பல தரப்பினரும் நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். சென்னையில் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்றதால், புதிய கல்வி கொள்கை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சூர்யாவின் பேச்சுக்கு ரஜினி ஆதரவு அளித்து பேசினார்.

Actor surya on Kappan film function
இதேவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, புதிய தேசிய கல்வி குறித்து பேசாமல் தனது சமூக ரீதியிலான கருத்துகளைத் தெரிவித்தார். “ நாம் எடுக்கும் முயற்சிகள் எப்போதும் தவறலாம். ஆனால், விடாமுயற்சியை எப்போதுமே தவறவிடக் கூடாது என்பதை நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். என்னுடைய நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன். எதையும் விளம்பரத்துக்காக அல்லாமல் சமூக பணியைச் செய்யலாம். எந்தெந்த விஷயங்களை எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டுமே பேசினால் போதுமானது” என்று தெரிவித்தார்.
’காப்பான்’ பட இசை வெளியீட்டு விழாவில் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பிரபலங்கள் தொட்டு பேசிய நிலையில், சூர்யா அதைப் பற்றி பட்டும் படாமல் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios