Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்தில் ஆதிவாசி குடும்பங்களுக்கு மிகப்பெரிய உதவி செய்த நடிகர் ராணா..! குவியும் பாராட்டு..!

பிரபல நடிகர் ராணா, 400 ஆதிவாசி மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்துள்ளார். இதற்க்கு பலர் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

actor rana help 400 tribes people  for food and medicine
Author
Chennai, First Published Jun 10, 2021, 5:41 PM IST

இந்த கொரோனா காலத்தில், பலரது வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி மத்திய - மாநில அரசுகளும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உதவி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் ராணா, 400 ஆதிவாசி மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்துள்ளார். இதற்க்கு பலர் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

actor rana help 400 tribes people  for food and medicine

மேலும் செய்திகள்: விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா ஷெரிப்பின் pregnancy டைம் கியூட் போட்டோஸ்..!
 

நடிகர் ராணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தாலும், இவரது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது என்றால், அது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'பாகுபலி' திரைப்படம் தான். மேலும் அஜித்துடன் சேர்ந்து 'ஆரம்பம்' , 'பெங்களூரு' நாட்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

actor rana help 400 tribes people  for food and medicine

மேலும் செய்திகள்: அக்கா - தம்பி பாசத்தை வெளிக்காட்டி ரசிகர்களை வியக்க வைத்த அனுபமா பரமேஸ்வரன்! கியூட் போட்டோஸ் !
 

இந்நிலையில் இவர் தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்க பட்ட நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் மருந்து உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கி உள்ளார். சரியான நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், மருத்துவத்திற்காகவும் இவர் செய்துள்ள உதவியை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios