10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ராகவா லாரன்சுடன் இணையும் பிரபல ஹீரோ..!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'ருத்ரன்' படத்தில் படத்தில், பிரபல ஹீரோ 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'ருத்ரன்' படத்தில் படத்தில், பிரபல ஹீரோ 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இவருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸை, வைத்து “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் பூஜையுடன் பிரமாண்டமாக துவங்கியது. இப்படத்தை, K.P.திருமாறன் கதை, திரைக்கதை எழுத “ருத்ரன்” படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்தில், நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில், இணைந்துள்ள பிரபல ஹீரோ குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு, ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த 'காஞ்சனா' படத்தில் திருநங்கையாக நடித்த, சரத்குமார் தற்போது 'ருத்ரன்' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை படக்குழு தற்போது அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.