பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..! அவரே வெளியிட்ட தகவல்!
இயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
அதன்படி இந்த படத்தில், பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, தற்போது நடிகர் பிரபு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில், சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் அஸ்வின் கக்குமானு சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மங்காத்தா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ, மேகா, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அஷ்வின் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில், கல்லூரி மாணவனாக நடித்துக்கொண்டே ஒலி வடிவமைப்பு செய்ததாகவும், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..! அவரே வெளியிட்ட தகவல்! இயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி இந்த படத்தில், பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, தற்போது நடிகர் பிரபு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில், சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் அஸ்வின் கக்குமானு சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மங்காத்தா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ, மேகா, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அஷ்வின் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில், கல்லூரி மாணவனாக நடித்துக்கொண்டே ஒலி வடிவமைப்பு செய்ததாகவும், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.