"ஐஸ்வர்யா ராய் எனக்கு அல்வா கொடுத்தார்"....போட்டுடைத்த அபிஷேக் பச்சன்....!
"ஐஸ்வர்யா ராய் எனக்கு அல்வா கொடுத்தார்".....மனம் திறந்த அபிஷேக் பச்சன்....!
உலக அழகி ஐஸ்வர்யா ராயை, இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் திருமணம் செய்து 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குள் தற்போது தகராறு எனவே இரண்டு பேரும் ஒரே வீட்டில் பிரிந்து வாழ்கின்றனர் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியே வந்த வண்ணம் இருந்தது.
இது குறித்து வாய் திறந்த அபிஷேக் பச்சன்" நான் ஐஸ்வர்யா ராயை அவர் ஒரு உலக அழகி என்பதால் மணக்க வில்லை, எங்கள் வாழ்க்கை அழகை அடிப்படையாக கொண்டது அல்ல, எங்கள் உறவும் அதை சார்ந்தது அல்ல
மேக்கப் இல்லாத ஐஸ்வர்யா ராயை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மனைவியை பார்த்து பலர் விசில் அடிப்பதை பார்த்து பழகி விட்டது
திருமணம் முடிந்த புதிதில், கணவருக்கு மனைவி ஏதாவது சமைத்து கொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்
என் மனைவி எனக்கு அல்வா செய்து கொடுத்தார். அது மிகவும் சுவையாக இருந்தது.
திருமணம் முடிந்து விட்டதால், தனி குடித்தனம் போக விருப்பம் இல்லை.எனக்கு எப்போதும் பெற்றோருடன் வசிப்பாத்து தான் நிம்மதி என தெரிவித்து உள்ளார் அபிஷேக்.