Asianet News TamilAsianet News Tamil

இறக்கும் முன் "அம்மாவிடம் கூறிய அந்த தகவல்"..நடிகை பிரியங்கா விஷயத்தில் வெளிவந்த உருக்கமான தகவல்..!

a sentimental statement came out about actress priyanka
a sentimental statement came out about actress priyanka
Author
First Published Jul 24, 2018, 2:25 PM IST


சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய கணவருடன் வசித்து வந்த சீரியல் நடிகை பிரியங்கா கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

தற்போது 32 வயதாகும், பிரியங்கா ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். பின், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானார். 

இந்நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில். இந்த பிரச்சனை ஏற்பட என்ன காரணம் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

a sentimental statement came out about actress priyanka

பிரியங்காவிற்கும் இவருடைய கணவருக்கும் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன போதிலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இது  தொடர்பாக இவருக்கும், அவருடைய கணவர் முனீர் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடைசியாக, நடிகை பிரியங்கா அவருடைய அம்மாவிடம், தான்  வைத்துள்ள beauty parlour கொஞ்சம் விரிவாக்கம் செய்கிறேன்..கண்டிப்பாக பால் காய்ச்சும் நிகழ்வுக்கு வந்து விடுங்கள் என கூறி உள்ளாராம்.   

பிரியங்காவின் இறுதி சடங்கின் போது, அவருடைய தாயார் இதனை  மற்றவர்களிடம் உருக்கமாக தெரிவித்து அழுதுள்ளார்.சமீப காலமாக சின்னத்திரை  நடிகர் நடிகைகள் அவ்வப்போது தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios