அம்மா வயது நடிகையிடம், தவறாக நடந்து கொண்ட 15 வயது சிறுவன்....
சுஷ்மிதா சென் பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது கூறிய சம்பவம் ஒன்று, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாகவே நடிகைகள் என்றால் பார்ப்பவர்களின் கண்ணோட்டம் வேறு விதமாகத்தான் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன் நான் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது.
அந்த நேரத்தில் யாரோ என்னிடம் தவறாக நடந்து கொண்டதை அறிந்தேன். உடனே அந்த கையை பிடித்துவிட்டேன். ஆனால் அதன் பிறகு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
அவன் ஒரு 15 வயது சிறுவன். முதலில் தன் மீது எந்த தவறும் இல்லை எனக்கூறி மறுத்த அவன், பின்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினான். நானும் அவன் வயதை கருத்தில் கொண்டு, அறிவுரை கூறி அனுப்பினேன் என தெரிவித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 42 வயது இருக்கும், தனது அம்மாவின் வயதை ஒத்த ஒரு நடிகையிடம், அந்த சிறுவன் இவ்வாறு நடந்து கொண்டது பிறருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீதும் அவர்கள் நடவடிக்கைகள் மீதும், எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சின்ன அலட்சியம் கூட அவர்களை இது போன்ற அழிவுப்பாதையில் அழைத்து செல்லக்கூடும். என்பதற்கு இது ஒரு உதாரணம்.