vuukle one pixel image

நெருங்கும் தேர்தல்..! அதிமுகவுடன் இணையும் ஓபிஎஸ் அணி ? க்ரீன் சிக்னல் தரும் எடப்பாடி !

Velmurugan s  | Published: Mar 20, 2025, 1:00 PM IST

அதிமுக கட்சியில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது அன்று அமித்ஷா பேச்சை மட்டும் கேட்டிருந்தால் கண்டிப்பாக அதிமுக இன்று ஆளும் கட்சியாக இருந்திருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய நிலையில் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி கூறிய அந்த கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்னும் 6 மாதக்காலம் ஓ பன்னீர்செல்வம் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறினார். சமீபத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்று சேர்ந்தால் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிட்டும்.