Jothimani : "தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணம்.. மோடி முதல் செந்தில் பாலாஜி வரை செல்கிறது" - பகீர் கிளப்பிய MP!

Jothimani : "தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணம்.. மோடி முதல் செந்தில் பாலாஜி வரை செல்கிறது" - பகீர் கிளப்பிய MP!

Ansgar R |  
Published : Apr 01, 2024, 07:29 PM IST

Jothimani Election Campaign : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட லந்தக்கோட்டை, பாளையம், மேட்டுக்களத்தூர், சேவைக்காரன்பட்டி, கோட்டாநத்தம் நாச்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜோதிமணி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா கூட்டணியின் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஜோதிமணி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிகழ்வின்போது, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் கீழே விழுந்து கிடந்தது. 

ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும், அங்கிருந்த வயதான முதியவர் அதை எடுத்துச் சென்று ஊன்றி வைத்தார் என்றும் கூறப்படுகிறது, இதுதான் இவர்கள் கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் மரியாதையா என்று பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் தொண்டர் ஒருவர் அதிகாலையிலேயே அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு, அவ்வழியே செல்லும் வாகனத்தை மறித்து, இந்த வழியாக வாகனம் செல்லக்கூடாது என்றும் அட்ராசிட்டி செய்துள்ளார். 

அதன் பிறகு ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பாஜக வேட்பாளர், ஜோதிமணி தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்தார் என்று நிரூபிப்பவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ரூபாய் நோட்டை காட்டி பேசியதைப் பற்றி ஜோதிமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜோதிமணி, பாரதிய ஜனதா கட்சியிடம் இந்த நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்த பணம் குவிந்து கிடக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் செய்த பணம் நரேந்திர மோடி இடம் மட்டுமில்லாமல் அண்ணாமலை, செந்தில் பாலாஜி என்று சொல்ல வந்துவிட்டு, பின் சுதாரித்துக் கொண்டு செந்தில்நாதன் வரை செல்கின்றது என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஜேபி ஆட்சியில் நாட்டு மக்களிடம் ஒரு 500 ரூபாய்க்கு கூட இல்லை, ஆனால் பாஜக வேட்பாளர் 50ஆயிரம் ரூபாய் வைத்து ஆட்டியது அனைத்துமே ஊழல் பணம் தான் என்று பேசினார்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி