Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!

Kanimozhi : "மோடி தமிழ் கற்க நாங்களே நல்ல ஆசிரியரை அனுப்புறோம்" - தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி!

Ansgar R |  
Published : Apr 01, 2024, 04:47 PM IST

MP Kanimozhi Election Campaign : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் துவங்க உள்ளது, ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்திய முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (01/04/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மந்திதோப்பு பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி அவர்களை குறித்து பேசினார்.  

"மோடி தமிழ் தெரியவில்லை என்று நாடகம் ஆடுகிறார். எனக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாய் இருக்கிறது என்று கூறுகின்றார். தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் வருத்தப்பட வேண்டும், எங்களை எல்லாம் இந்தி கற்க சொல்றீங்க, நீங்க தமிழ் கத்துக்கோங்க! நாங்கள் ஒரு நல்ல ஆசிரியரை பார்த்து அனுப்பி வைக்கிறோம், இதற்கு ஏன் வருத்தம்" என்று கிண்டலாக பேசியுள்ளார். 

05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
Read more