ஒய்யாரமாக சாலையை கடந்த யானை கூட்டம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த செல்பி பிரியர்கள்

ஒய்யாரமாக சாலையை கடந்த யானை கூட்டம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த செல்பி பிரியர்கள்

Published : Oct 05, 2022, 10:04 AM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைக் கூட்டம் கடப்பதைக் கண்டு அச்சமடைந்த செல்பி பிரியர்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

நேற்று மாலை இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது.அப்போது. அவ்வழியாக சென்ற யானைக்கூட்டத்தை பார்த்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனத்தை திருப்பி ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு சில பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கத்தில் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர்.

 

06:22அடக்குமுறையால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது ! CPI வீரபாண்டியன் அதிரடி பேட்டி
08:45மத்திய அரசே மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதே! களத்தில் இறங்கிய CPI வீரபாண்டியன் எச்சரிக்கை!
01:27பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
03:0713 மணி நேர அராஜக விசாரணை... கொதித்தெழுந்த எம்.எல்.ஏ-வின் மகன்! ஆளுங்கட்சியின் பழிவாங்கல் அம்பலம்!
04:48சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்
07:29ஒரு எக்ஸாமை ஒழுங்கா நடத்தத் துப்பில்லை! — நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார்
02:14போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் ! விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது !
06:59நாங்கதான் உண்மையான அதிமுக ! - எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த சண்முகம் தரப்பு !
06:58கீழடியில் திடீர் ஆய்வு.....பார்வையிட்ட பின் தொல்லியல் துறைக்கு அதிரடி உத்தரவிட்ட அமைச்சர் ராஜ்மோகன்!
09:37மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!