ஒய்யாரமாக சாலையை கடந்த யானை கூட்டம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த செல்பி பிரியர்கள்

ஒய்யாரமாக சாலையை கடந்த யானை கூட்டம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த செல்பி பிரியர்கள்

Published : Oct 05, 2022, 10:04 AM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை குட்டிகளுடன் யானைக் கூட்டம் கடப்பதைக் கண்டு அச்சமடைந்த செல்பி பிரியர்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

நேற்று மாலை இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது.அப்போது. அவ்வழியாக சென்ற யானைக்கூட்டத்தை பார்த்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனத்தை திருப்பி ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒரு சில பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கத்தில் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர்.

 

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி