என்ன ஒரு மனசு..  3 மாத குட்டியானைக்கு உணவளித்து 5 மணிநேரம் போராடி தாயுடன் சேர்த்த வனத்துறையினர்.!

என்ன ஒரு மனசு.. 3 மாத குட்டியானைக்கு உணவளித்து 5 மணிநேரம் போராடி தாயுடன் சேர்த்த வனத்துறையினர்.!

Published : Apr 07, 2024, 11:04 AM IST

கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாய பகுதியில் சுற்றி வந்தது.

கோவை பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் தாயிடம் இருந்து பிரிந்த 3 மாத குட்டியானையை மீட்டு உணவளித்து, மீண்டும் தாய் யானையிடம் வனத்துறையினர் சேர்த்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாய பகுதியில் சுற்றி வந்தது.  தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யாணையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் 

பிரிந்த குட்டி யானைக்கு இளநீர் குல்கோஸ், பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்க  வனத்துறையினர் ஈடுபட்டனர். வனச்சரக ஊழியர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து  தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது  வனப்பகுதி ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதி அருகே நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 5 மணிநேரம் போராடி  குட்டியானையை மீண்டும் அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்.

04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
03:24அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
03:41பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
06:45குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
05:00பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
03:16மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
03:49தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
Read more