Police : கேவலமா இருக்கு.. டிஸ்மிஸ் செய்திடுவேன்- டிராபிக் போலீசை வாக்கி டாக்கியில் வறுத்தெடுத்த சுதாகர் ஐபிஎஸ்

Police : கேவலமா இருக்கு.. டிஸ்மிஸ் செய்திடுவேன்- டிராபிக் போலீசை வாக்கி டாக்கியில் வறுத்தெடுத்த சுதாகர் ஐபிஎஸ்

Published : Jul 24, 2024, 01:46 PM IST

டிராபிக் போலீசார் மீதுள்ள மரியாதையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து ஒரு படி மேலே சென்றால் 4 படி கிழே இறங்குகிறது என வேதனையோடு தெரிவித்துள்ள கூடுதல் ஆணையர் சுதாகர், இது நல்லதல்ல. இது கடைசி எச்சரிக்கை என கூறியுள்ளார். 

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்

வாகன விதிமுறைகள் மீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதில் லஞ்சம் வாங்குவதை தடுக்க ஆன்லைன் மூலம் பணம் கட்டும் நடைமுறையானது அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னை வேப்பேரி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்களிடம்  எதாவது ஒரு காரணத்தைக்கூறி அபராதம் விதிப்பதாக எச்சரித்து அவர்களின் பணம் வசூலித்து வந்தனர். நேரடியாக கையில் பணம் வாங்காமல் அங்குள்ள மஞ்சள் பையில் பணத்தை போடும்படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து வாகன ஓட்டிகளும் வேறு வழியின்று  மஞ்சள் பையில் பணத்தை போட்டுவிட்டு சென்றனர். இந்த காட்சி  சமூக வலைதளத்தில் வீடியோவானது வெளியானது. 

 வாக்கி டாக்கியில் எச்சரிக்கை

இந்த வீடியோவை பார்த்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கியில்  எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், வாகன சோதனையின் பொழுது ஏதேனும் புகார்கள் போலீசார் மீது வந்தால் அவர்களை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

ரொம்ப அசிங்கமாக இருக்கு

டிராபிக்கில் பணம் வாங்குவதற்காகவே வேலையில் இருந்தால் வெளியே சென்று விடுங்கள். ஒருவரால் மொத்த டிராபிக் துறைக்கே கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீர்கள்.  ஒரு சில செய்திகளை பார்க்கும் பொழுது மிகவும் அசிங்கமாக உள்ளது. டிராபிக் போலீசார் மீதுள்ள மரியாதையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு படி மேலே சென்றால் 4 படி கிழே இறங்குகிறது. இது நல்லதல்ல. இது கடைசி எச்சரிக்கை. அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத பட்சத்தில் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுதாகர் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். 

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்