Police : கேவலமா இருக்கு.. டிஸ்மிஸ் செய்திடுவேன்- டிராபிக் போலீசை வாக்கி டாக்கியில் வறுத்தெடுத்த சுதாகர் ஐபிஎஸ்

Police : கேவலமா இருக்கு.. டிஸ்மிஸ் செய்திடுவேன்- டிராபிக் போலீசை வாக்கி டாக்கியில் வறுத்தெடுத்த சுதாகர் ஐபிஎஸ்

Published : Jul 24, 2024, 01:46 PM IST

டிராபிக் போலீசார் மீதுள்ள மரியாதையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து ஒரு படி மேலே சென்றால் 4 படி கிழே இறங்குகிறது என வேதனையோடு தெரிவித்துள்ள கூடுதல் ஆணையர் சுதாகர், இது நல்லதல்ல. இது கடைசி எச்சரிக்கை என கூறியுள்ளார். 

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்

வாகன விதிமுறைகள் மீறும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதில் லஞ்சம் வாங்குவதை தடுக்க ஆன்லைன் மூலம் பணம் கட்டும் நடைமுறையானது அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னை வேப்பேரி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை மீறும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்களிடம்  எதாவது ஒரு காரணத்தைக்கூறி அபராதம் விதிப்பதாக எச்சரித்து அவர்களின் பணம் வசூலித்து வந்தனர். நேரடியாக கையில் பணம் வாங்காமல் அங்குள்ள மஞ்சள் பையில் பணத்தை போடும்படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து வாகன ஓட்டிகளும் வேறு வழியின்று  மஞ்சள் பையில் பணத்தை போட்டுவிட்டு சென்றனர். இந்த காட்சி  சமூக வலைதளத்தில் வீடியோவானது வெளியானது. 

 வாக்கி டாக்கியில் எச்சரிக்கை

இந்த வீடியோவை பார்த்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் வாக்கி டாக்கியில்  எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், வாகன சோதனையின் பொழுது ஏதேனும் புகார்கள் போலீசார் மீது வந்தால் அவர்களை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

ரொம்ப அசிங்கமாக இருக்கு

டிராபிக்கில் பணம் வாங்குவதற்காகவே வேலையில் இருந்தால் வெளியே சென்று விடுங்கள். ஒருவரால் மொத்த டிராபிக் துறைக்கே கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீர்கள்.  ஒரு சில செய்திகளை பார்க்கும் பொழுது மிகவும் அசிங்கமாக உள்ளது. டிராபிக் போலீசார் மீதுள்ள மரியாதையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு படி மேலே சென்றால் 4 படி கிழே இறங்குகிறது. இது நல்லதல்ல. இது கடைசி எச்சரிக்கை. அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காத பட்சத்தில் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுதாகர் ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி