இராஜபாளையத்தில் சாஸ்தா கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு! இளைஞரை கயிறு கட்டி மீட்ட வனத்துறை!

இராஜபாளையத்தில் சாஸ்தா கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு! இளைஞரை கயிறு கட்டி மீட்ட வனத்துறை!

Published : Oct 23, 2023, 10:40 PM IST

விருதுநகர் சாஸ்தா கோவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மறு கரையில் மாட்டிக்கொண்ட இளைஞரை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. மேலும்  விடுமுறை தினமான இன்று இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக சாஸ்தா கோவில் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

 இதில் சாஸ்தா கோவில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு கீழே உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  குளித்துக் கொண்டிருந்த ஒரு  இளைஞர் மறுகரையில் மாட்டிக் கொண்டார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள்  வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் மறுகரையில் மாட்டிக்கொண்டிருந்த இளைஞரை பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர்.

நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்
ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்
Read more