Watch : ஏலத்திற்கு வரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்! இழப்பீடு தராததால் நீதிமன்றம் நவடிக்கை!

Watch : ஏலத்திற்கு வரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்! இழப்பீடு தராததால் நீதிமன்றம் நவடிக்கை!

Published : Mar 22, 2023, 11:51 AM IST

ரூ.2.35 கோடி இழப்பீடை நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
 

மதுரை அரசரடியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சவரிமுத்து,
இவர் கடந்த 1998 ல் காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் சுங்கச் சாவடி முதல் சாத்தூர் வரை சாலை பணிகளை மேற்கொண்டார். 30 சதவீத பணிகளை முடிதத் நிலையில் திடீரென வேறு ஒருவருக்கு ஒப்பந்த பணிகளை மாற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து சவரிமுத்து விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு இழப்பீடு கோரி கடந்த 2002 ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இவருக்கு உரிய இழப்பீடை வழங்க நீதிபதி உத்தரவிட்டனர். ஆனால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அதன் பேரில் கடந்த 2022ம் ஆண்டு, 2.35 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்த குமார், உத்தரவின் பேரில், நீதிமன்ற இளநிலை கட்டளப் பணியாளர் ஜெயக்குமார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவற்றில் ஏல அறிவிப்பு நோட்டீஸை ஒட்டியுள்ளனர். இந்த நோட்டீஸில் வருகிற மார்ச் 31 ம்தேதி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்
ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்
Read more