Watch : விருதுநகர் வெயிலு காத்தம்மன் கோவிலில் வைகாசி திருவிழா! - அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

May 31, 2023, 10:05 AM IST

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி வெயிலு கந்தம்மன் கோவிலில் வைகாசி மாத பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு மண்டபப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், கரும்புத் தொட்டில் கட்டுதல், பிள்ளை, பால்குடம் எடுத்தல் எனபல்வேறு வகைகளில் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.