Watch : விருதுநகர் அருகே பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த மலைப் பாம்பு! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

Watch : விருதுநகர் அருகே பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த மலைப் பாம்பு! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

Published : Mar 18, 2023, 02:53 PM IST

வத்திராயிருப்பு பெட்ரோல் பங்கிற்குள் ஒரே வாரத்தில் 2 வது முறையாக மலைப்பாம்பு புகுந்ததால் பங்க் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்துக்கொண்டு சென்றனர்.
 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு டூ கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் கோபாலபுரம் விலக்கு பகுதியில் பாலாஜி என்பவர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென பெட்ரோல் பங்கிற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பங்க் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

உடனடியாக இது குறித்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பை லாவகரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே பெட்ரோல் பங்கில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிபட்டு மலைப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்
ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்