கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; சாம்பிராணி போடும் சாக்கில் வாலிபர் சில்மிஷம்

Oct 18, 2023, 1:01 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காலேஷ் பாஷா என்பவர் குடியாத்தம் பகுதியில் உள்ள கடைகளில் சாம்பிராணி புகை போடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காட்பாடி சாலையில் உள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது கடையில் இருந்த  ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆத்திரமடைந்த தாய் குழந்தையிடம் பாலியல் சீண்டல் செய்த காலேஷ் பாஷாவை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் காலேஷ் பாஷாவை போக்சோ  சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.