புதுமனை புகுவிழாவிற்காக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்; அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் காயம்

புதுமனை புகுவிழாவிற்காக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்; அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் காயம்

Published : Nov 20, 2023, 10:07 AM IST

நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, லட்சுமிபுரம் அருகே பாபு (வயது 65) என்பவரின் வீட்டில் இன்று காலை புதுமனை புகுவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது உறவினர்கள் வந்த கார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு விழாவிற்கு சென்றிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது லேசாக உரசியதில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதும், அருகில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காரில் இருந்த மூன்று பேர் மற்றும் மோதிய காரில் இருந்த மூன்று பேர் என மொத்தம் ஆறு பேர் லேசான காயங்களுடன் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சுகிறது அந்த காட்சிகள். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்
Read more