சாலைகளில் எமனாக வலம் வரும் அரசுப் பேருந்துகள்; தற்காலிக பணியாளர்களால் மக்கள் பீதி - வேலூரில் 20 பேர் காயம்

சாலைகளில் எமனாக வலம் வரும் அரசுப் பேருந்துகள்; தற்காலிக பணியாளர்களால் மக்கள் பீதி - வேலூரில் 20 பேர் காயம்

Published : Jan 10, 2024, 07:29 PM IST

குடியாத்தம் அருகே தற்காலிக பணியாளரால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து மோதி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை ஏரிக்கரை ஓரம் பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. பேருந்து தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட நிலையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்து விபத்துக்குள்ளான நிலையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் சம்பவத்திற்கு சென்று பார்வையிட்டனர். தற்காலிக ஓட்டுநரை வைத்து அரசு பேருந்து இயக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்
Read more