100 சதவீத வாக்குப்பதிவு; வெள்ளி கடற்கரையில் மணல் சிற்பம் - மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய ஆட்சியர்

100 சதவீத வாக்குப்பதிவு; வெள்ளி கடற்கரையில் மணல் சிற்பம் - மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய ஆட்சியர்

Published : Mar 20, 2024, 11:51 AM IST

கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மணல் சிற்பம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கடலூர் வெள்ளி கடற்கரையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மணல் சிற்பத்தினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அருண் தம்பராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழியை கல்லூரி மாணவர்கள்  ஏற்றனர், அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் வெள்ளி கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட  தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

01:29நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்
03:10இரண்டாவதும் பெண் குழந்தையா? கர்ப்பிணியை தாக்கி கொடுமை படுத்திய கொடூரன் - பெண் கதறல்
02:05கடலூரில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெள்ளை நிற நாகம்; லாகவமாக மீட்ட பாம்பு பிடி வீரர்
00:44வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
01:19காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்
02:15கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
03:03Arudra Darisanam: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
00:28Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
01:54தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஆடை வழங்கி கௌரவித்த பாஜகவினர்