நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்

Published : Mar 14, 2024, 06:09 PM IST

விருத்தாசலத்தில் கூண்டில் நின்று சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த, காவல் உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக ஆலடி காவல் உதவி ஆய்வாளர் துரைகண்ணு என்பவர் சாட்சியம் அளிக்க வந்தார். அப்போது நீதியரசர் பிரபாசந்திரன் முன்னிலையில், கூண்டில் நின்றபடி சாட்சியம் அளித்துக் கொண்டிருந்த போது,  திடீரென காவல் உதவி ஆய்வாளர் கூண்டில் நின்றவாறே மயங்கி கீழே விழுந்தார். இதனால் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்சியம் அளிக்க வந்த உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

01:29நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்
03:10இரண்டாவதும் பெண் குழந்தையா? கர்ப்பிணியை தாக்கி கொடுமை படுத்திய கொடூரன் - பெண் கதறல்
02:05கடலூரில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெள்ளை நிற நாகம்; லாகவமாக மீட்ட பாம்பு பிடி வீரர்
00:44வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
01:19காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்
02:15கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
03:03Arudra Darisanam: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
00:28Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
01:54தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஆடை வழங்கி கௌரவித்த பாஜகவினர்