VIDEO : அன்று சிறு செடியாக நட்டு வைத்தேன்! இன்று பெரு மரமாய்...! கட்டித் தழுவி மகிழ்ந்த அன்புமணி!

Jun 10, 2023, 11:57 AM IST

21 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகம் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அரியலூர் மாவட்டம் செந்துறை இலை கடம்பூரில் ஒரு ஆலமரச் செடியை நட்டு வைத்தார். அது, இன்று பெரிய விருச்சகமாய் வளர்ந்து அனைவருக்கும் நிழல் தந்து வருகிறது. மரத்தை பார்வையிட்ட அன்புமணி, அதனை கட்டித் தழுவி மகிழ்ந்தார்.

மேலும் மரம் நடுவது சிறந்த அறம் என்றும், பொதுமக்கள் மரங்களை நட்டு இயற்கையை காக்கவும், அதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அன்புமணி அன்பு கோரிக்கை விடுத்தார்.
 

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், இலைகடம்பூர் கிராமத்தில் 21 வருடத்திற்கு முன்பு 2002-ல் மாநில தலைவராக இருந்தபோது, என்னால் நடப்பட்ட மரக்கன்று தற்போது ஆலமரமாக வளர்ந்து, விருட்சமாக இருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.! pic.twitter.com/t6pEcCyoND

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)