Watch : மீன் குட்டையில் சிக்கிய முதலை! - இன்னும் இருக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் பீதி!

Watch : மீன் குட்டையில் சிக்கிய முதலை! - இன்னும் இருக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் பீதி!

Published : Apr 10, 2023, 11:59 AM ISTUpdated : Apr 10, 2023, 12:50 PM IST

அரியலூரில் மீன் குட்டையில் சிக்கிய முதலையால் மக்கள் பீதிடைந்துள்ளனர். அருகில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து முதலை வந்திருக்கலாம் எனவும் தகவல்.
 

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்திற்கு அருகில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்நிலையில் குருவாடி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தனது வயலில் அமைந்துள்ள மீன் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார் அப்போது மீன் வலையை இழுத்தபோது பாரமாக இருந்த நிலையில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து மீன் வலையை வெளியே எடுத்துப் பார்த்தப்போது அதில் முதலை சிக்கியிருந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சியடைந்த தேவேந்திரன் மீன்வளையில் இருந்த முதலையை பிடித்து கயிற்றால் கட்டி வைத்தார்.



இது குறித்து தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரையில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குருவாடிக்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை வந்திருக்கலாம் எனவும் கொள்ளிடத்தில் மேலும் முதலை இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் முதலை தென்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே கொள்ளிடம் ஆற்று நீரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீரை பயன்படுத்தி வரும் நிலையில் கொள்ளிடம் ஆற்றில் காணப்படும் முதலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கொள்ளிடத்தில் இருக்கும் முதலைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

02:23மகா சிவராத்திரி; கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா
01:48அரியலூரில் பெற்றோரின் கால்களை கழுவி ஆசி பெற்ற பொதுத்தேர்வு மாணவர்கள்; தனியார் பள்ளியில் நிகழ்ந்த நெகிழ்ச்சி
01:20அரியலூரில் அரசுப் பேருந்து மரத்தில் மோதி கோர விபத்து; குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
03:18கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
02:36கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மகாபிஷேகம்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு
01:59இதுபோன்ற தைரியமான முடிவை அதிமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும் - சீமான் புகழாரம்
04:00அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கல்வி சீர் வழங்கி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்திய கிராம மக்கள்
01:56அரியலூரில் பாரம்பரிய விதை திருவிழா! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!
1616:40அரியலூர் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்; பக்தர்கள் பரவசம்
01:45பாட்ஷா ரஜினிகாந்த் ஸ்டைலில் ஆட்டோ ஓட்டி அசத்திய எம்.எல்.ஏ. கண்ணன்