ஹஜ் யாத்திரை:
ஹஜ் யாத்திரை நெருங்கி வருவதால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளின் குடிமக்களுக்கு சில விசாக்கள் வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, ஹஜ் யாத்திரை முடிவடையும் ஜூன் மாத நடுப்பகுதி வரை உம்ரா, வணிகம் மற்றும் குடும்ப வருகைக்கான விசாக்களுக்கு தடை அமலில் இருக்கும்.
இந்தத் தடை அறிவிப்பு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பொருந்தும். ஹஜ் 2025 சீசன் ஜூன் 4-9 வரை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.