விராட் கோலி
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்த விராட் கோலி 3 போட்டிகளிலும் 8, 11 மற்றும் 36 என்று மொத்தமாக 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அப்போது இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆனால், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் ஓய்வு நேரத்தை செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சாமி தரிசனம் செய்தனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற, இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். இந்த முக்கியமான தொடரில் இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், விராட் கோலி சிறப்பாக ஆடியாக வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கும் விராட் கோலி, டெஸ்ட்டில் 27 சதங்கள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தமாக 74 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.