Puri Jagannath Rath Yatra 2022
ஒவ்வொரு கோவிலுக்கும் எதாவது மர்மங்கள் தனி சிறப்புகள் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கும். அந்த வகையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. ஆம், அதில் ஒன்றாக மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல், ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். மேலும், என்னென்னெ அதிசயங்கள் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
Puri Jagannath Rath Yatra 2022
யாரால் கட்டப்பட்டது..?
ஒடிசாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சோழ மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஆலயத்தில் ஜகன்னாதர், தேவி சுபத்ரா மற்றும் பாலபத்திரர் ஆகிய மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.
Puri Jagannath Rath Yatra 2022
12 வருசத்துக்கு ஒரு முறை நடைபெறும் நவகளேபரா திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய சிலைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுமாம். கோடை காலத்தில் சூரியன் வெயில் சுட்டெரித்தாலும், இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. கோபுரத்தின் நிழலை பார்க்கவே முடியாதம்.
Puri Jagannath Rath Yatra 2022
உணவு சமைக்கப்படும் போது, ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். கீழே இருக்கும் பாத்திரத்தின் உணவு வேகுவதற்கு முன்பாகவே, மேலே பாத்திரத்தில் இருக்கும் உணவு வெந்துவிடுவாம். எங்காவது நீங்கள் இப்படி பட்ட அதிசயங்களை பார்த்தது உண்டா..? இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கியதால் தான் இன்றளவும் ஜெகநாதர் கோவில் சிறந்து விளங்கி வருகின்றது.