கோடையில் டேங்கரில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ஈசியான டிப்ஸ் இதோ...

First Published Apr 29, 2024, 10:53 PM IST

கோடை காலத்தில் வீட்டு டேங்கரில் இருக்கும் தண்ணீர் எளிதாக வெந்நீராக மாறிவிடும். இதனால் அதை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த முடியாமல் போகலாம். சில எளிய உத்திகளை பயன்படுத்தி டேங்கரில் உள்ள தண்ணீரை குளிர்விக்க முடியும்.

water tank

கோடையில் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலால் வீட்டில் டேங்கரில் உள்ள தண்ணீர் கூட வெந்நீராக ஆகிவிடும். சில எளிமையான வழிகளில் டேங்கரில் உள்ள தண்ணீரை எப்படி குளிர்விக்கலாம் என்று பார்ப்போம்.

water tank

பொதுவாக அனைத்து தண்ணீர் டேங்கர்களும் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக வெள்ளை நிற டேங்கர் பயன்படுத்த வேண்டும். கறுப்பு நிறம் வெப்பத்தை அதிகமாக கிரகித்துக்கொள்ளும்.

இதன் காரணமாக, தொட்டி விரைவாக வெப்பமடைகிறது. எனவே, உங்கள் வீட்டில் கருப்பு தொட்டி இருந்தால், அதற்கு வெள்ளை அடிக்கலாம். இது தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

water tank

தொட்டி சூடாவதால் மட்டும் இல்லாமல், குழாய்கள் மூலமாகவும் தண்ணீர் சூடாகிறது. எனவே தண்ணீர் குழாயை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க ஒரு கவர் பயன்படுத்தப்படலாம்.

இந்தக் கவர்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கும். இதனால் குழாயைத் திறந்தவுடன் வரும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

water tank

தொட்டியின் இடத்தை மாற்றிப் பார்க்கலாம். கோடையில், நேரடி சூரிய ஒளியால் தொட்டியில் உள்ள நீர் வெப்பமடைகிறது. எனவே தொட்டியின் மீது சூரிய ஒளி படாதபடி தொட்டியின் இடத்தை நிழல் உள்ள இடத்தில் வைக்கலாம்.

தண்ணீர் தொட்டியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தண்ணீர் தொட்டியை கோன் பை கொண்டு மூடலாம். பின் தார்பாய் வைத்தும் மூடலாம். இது தொட்டியில் உள்ள தண்ணீரை ஓரளவு குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தொட்டியின் அடிப்பகுதியில் சேற்றை நிரப்பி அதன் மேல் தொட்டியை வைக்கலாம். அதன் மூலமும் தண்ணீரை சற்று குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.

click me!