Published : Apr 29, 2024, 02:37 PM ISTUpdated : Apr 29, 2024, 02:44 PM IST
கோடையில் உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்..
கோடை காலத்தில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் காரணமாக தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், சில எளிய முறைகளின் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக்கலாம்.
26
வெள்ளை பெயிண்ட்: பொதுவாகவே கருப்பு நிற தண்ணீர் தொட்டியை விட வெள்ளை நிற தண்ணி தொட்டி தான் மிகவும் சிறந்தது. ஏனெனில், கருப்பு நிறம் வெப்பத்தை வேகமாக உறிஞ்சுகிறது. இதன் காரணமாக தொட்டி விரைவாக வெப்பமடைகிறது. எனவே, உங்கள் வீட்டில் கருப்பு தொட்டி இருந்தால் அதன் மீது வெள்ளை பெயிண்ட் பூசவும். இதனால் தொட்டியில் உள்ள நீர் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.
36
கவர் பயன்படுத்துங்கள்: தொட்டி மட்டுமின்றி, குழாய்களின் காரணமாகவும் தண்ணீர் சூடாகிறது. அத்தகைய சூழ்நிலையில், சூரிய ஒளியில் இருந்து குழாயைப் பாதுகாக்க கவர் பயன்படுத்தலாம். அதற்கான கவர்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. எனவே, குழாய் மீது ஒரு கவர் போட்டு மூடினால், தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.
46
தொட்டி இடத்தை மாற்றுங்கள்: கோடை காலத்தில், தொட்டி சூரிய ஒளி படும் இடத்தில் நேரடியாக இருப்பதால், அதிலிருக்கும் தண்ணீர் சூடாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தண்ணீர் தொட்டியை சூரிய ஒளி தொட்டியின் மீது விழாத இடத்தில் வையுங்கள்.
கோணிப் பை: சூரிய ஒளியிலிருந்து தண்ணீர் தொட்டியை பாதுகாக்க முதலில் கோணி பையை வைத்து தண்ணீர் தொட்டியை மூடுங்கள். பிறகு அதன் மீது தார் பாலின் போட்டு மூடுங்கள். இதனால் தொட்டியில் இருக்கும் தண்ணீர் ஓரளவு குளிர்ச்சியாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.