Nayanthara : உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்... பிரிவுக்கு பின் மீண்டும் இணைந்த விக்கி - நயன்! பாசமழை பொழிந்த மகன்கள்

First Published Mar 27, 2024, 12:18 PM IST

எல் ஐ சி பட ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த விக்னேஷ் சிவன், மீண்டும் சென்னை திரும்பியதும் அவர் மீது பாசமழை பொழிந்துள்ளார் நயன்தாரா.

nayanthara

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றியபோது காதலிக்க தொடங்கினர். சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. காதல் கணவனை கரம்பிடித்த கையோடு நான்கே மாதங்களில் குழந்தையும் பெற்றுக்கொண்டார் நயன்தாரா. வாடகைத் தாய் மூலம் இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர்.

nayanthara Family

திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் நடிகை நயன்தாரா தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட தவறுவதில்லை. அதேபோல் விக்னேஷ் சிவனும் தன் மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் அன்பை வெளிபடுத்தி வருவார். அதுமட்டுமின்றி தன் மகன்களை மனதில் வைத்து ஒரு பாடலையே எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதுதான் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடல்.

இதையும் படியுங்கள்... Vijay Antony : சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க ஆனால் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க.. விஜய் ஆண்டனி அட்வைஸ்..

nayanthara husband vignesh shivan

அந்த பாடலில் கூட ஒரு வரியில் தன் மகன்கள் இருவரின் பெயரையும் பயன்படுத்தி இருப்பார். அந்த அளவுக்கு மகன்கள் மீது பாசம் வைத்திருக்கும் விக்னேஷ் சிவன், முதன்முறையாக தன்னுடைய குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். எல் ஐ சி படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் மலேசியா சென்றிருந்த அவர், அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.

nayanthara insta post

சென்னை திரும்பிய விக்னேஷ் சிவனை கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் உயிர் மற்றும் உலக். குழந்தைகளைப் போல் தானும் விக்கியை ரொம்ப மிஸ் பண்ணினேன் என நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, விக்னேஷ் சிவனை வரவேற்றபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார். கணவர் மீது பாசமழை பொழிந்த நயனின் இந்த பதிவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Ramcharan : ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் ராம்சரண்! ஆத்தாடி அவரின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

click me!