nayanthara
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றியபோது காதலிக்க தொடங்கினர். சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. காதல் கணவனை கரம்பிடித்த கையோடு நான்கே மாதங்களில் குழந்தையும் பெற்றுக்கொண்டார் நயன்தாரா. வாடகைத் தாய் மூலம் இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர்.
nayanthara husband vignesh shivan
அந்த பாடலில் கூட ஒரு வரியில் தன் மகன்கள் இருவரின் பெயரையும் பயன்படுத்தி இருப்பார். அந்த அளவுக்கு மகன்கள் மீது பாசம் வைத்திருக்கும் விக்னேஷ் சிவன், முதன்முறையாக தன்னுடைய குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். எல் ஐ சி படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் மலேசியா சென்றிருந்த அவர், அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.