புதன்-சனியின் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். கிரகங்களின் ராசி மாற்றம் நல்ல பலன்களையும், தீய பலன்களையும் ஏற்படுத்தும்.
அதன்படி, ஜூன் மாதம் 2 முக்கிய மாற்றங்களுடன் தொடங்கியது. ஜூன் 2022 முதல் வாரத்தில், சனி மற்றும் புதன் ஆகிய 2 முக்கிய கிரகங்களின் இயக்கம் மாறியது. ஜூன் 3 அன்று புதன் ரிஷப ராசிக்கு மாறினார். ஜூன் 5 அன்று சனி கும்ப ராசியில் வக்ரமானார். சனி மற்றும் புதனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த 1 மாதம் முழுவதும் புதன் இந்த நிலையில் இருப்பார். அதேபோன்று, அடுத்த 2023 அக்டோபர் 23 வரை சனி பிற்போக்கு நிலையில் இருப்பார். இது போன்ற சூழ்நிலையில் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேஷம்:
சனி மற்றும் புதனின் சஞ்சாரம் மேஷ ராசியில் அனுகூலமாக இருக்கும். தொழில்-வியாபாரத்தில் அதிகப்படியான பலன்களை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
ரிஷபம்:
புதன் ரிஷப ராசியில்பிறந்தவர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இருக்கும். எல்லா விதத்திலும், அனுகூலமான நேரமாக இது இருக்கும். பணம் கையில் இருக்கும். கூட்டுப் பணிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, புதன் ஆகிய கிரகங்களின் மாற்றம் நல்ல பலன்களை கொடுக்கும். தடைபட்ட வேலைகள் தற்போது நடந்து முடியும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் புதிய வெற்றி நிச்சயம். வியாபாரிகள் சிறப்பாகச் செயல்படுவார்கள். தொழிலில் லாபம் பெருகும்.