சுடருக்கு கண்டிஷன் போட்ட எழில்! மகிழ்ச்சியில் மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

Published : May 03, 2024, 11:21 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் சுடரை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

PREV
14
சுடருக்கு கண்டிஷன் போட்ட எழில்!  மகிழ்ச்சியில் மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

அதாவது, எழில் சுடரை காப்பாற்ற அவள் அஞ்சலியை பார்க்க ஹாஸ்பிடல் வருகிறாள், மனோகரி அஞ்சலியை பார்க்க கூடாது என்று தடுத்து நிறுத்த கனகவல்லி அஞ்சலிக்காக அவளை உள்ளே அனுப்பி வைக்கிறாள். உள்ளே வந்த சுடர் அஞ்சலி பக்கத்தில் உட்கார்ந்து பேச சுடரின் குரலை கேட்டதும் கண் விழிக்க எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். 

24

இதனை தொடர்ந்து அஞ்சலியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர கனகவல்லி இனி யார் என்ன சொன்னாலும் சுடர் நம்ம கூட இருப்பா என்று சொல்ல மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். இதனையடுத்து சுடரும் அவர்களுடன் வருகிறாள். ஆனால்  வீட்டிற்குள் நுழைய தயங்கியபடி நிற்க கனகவல்லி உனக்கு என்ன வெத்திலை பாக்கு வச்சி கூப்பிட்டா தான் வருவியா என்று கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறாள். 

Jason Sanjay: அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட்டில் தளபதி மகன் சஞ்சய்! ஹாண்ட்சம் ஹீரோவை போல் கொடுத்த அசத்தல் போஸ்!

34

அதன் பிறகு சுடர் உள்ளே வர எழில் இனிமே இவ கீழ தான் இருக்கனும், அஞ்சலிக்காக மட்டும் தான் இவளை வீட்டிற்குள் இருக்க அனுமதி தரேன், அஞ்சலியை தவிர வேற யாரும் இவ கூட பேச கூடாது என்று கண்டிஷன் போடுகிறான். நைட் ஆனதும் சுடர் கவலையில் உட்கார்ந்திருக்க அவள் அருகே வரும் அஞ்சலி உன்ன எப்படி கூப்பிடனும்? சுடரா? தமிழா? என்று கேட்க உனக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படி கூப்பிடு என்று சொல்ல அஞ்சலி உனக்காக நான் ஒரு பெயரை யோசிச்சி வச்சிருக்கேன் என்று சொல்கிறாள். 

44

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Sanchana: 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன் காதலர் இந்த பிரபலமா? 17 டேக் எடுத்து ஓகேவான வீடியோ வைரல்!

Read more Photos on
click me!

Recommended Stories